காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 2017, 2018 ஆகிய இரு ஆண்டுகளிலும் பல துறைகளிற்கும் யாழ்ப்பாணம், தென்கிழக்கு, கிழக்கு, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களிற்கு பத்து மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு சென்றிருந்தனர். அமரர் S.P.S என காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்ட பிரபல வர்த்தகரான திரு.S.P.சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அன்னாரது மகனும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினருமான திரு.அரிகரன் அவர்களின் முழுமையான அனுசரணையுடன் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்த விழா சென்ற 08-03-2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராக யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வுநிலை உப அதிபரும், மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் ஆசிரியரும் காரை.இந்துவின் பழைய மாணவனுமாகிய திரு.பொன்னுத்துரை ஸ்ரீகரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும், கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மடத்துக்கரை அம்பாள் ஆலயத்தில் வழிபாடுசெய்த பின்னர் பாராட்டைப் பெற்ற மாணவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு கல்லூரியின் பான்ட் இசைக்குழுவின் அணிவகுப்புடன் நடராசா ஞாபகார்த்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்பெற்றன. அதிபரின் தலைமையுரை, பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் ஆகியோரின் உரைகள் என்பவற்றைத் தொடர்ந்து சமூகமளித்திருந்த ஆறு மாணவர்களுக்கும் விருந்தினர்கள ரொக்கமாக ஊக்குவிப்பு பரிசல்களை வழங்கினர். சமூகமளிக்க முடியாதிருந்த மாணவர்களின் சார்பில் அவர்களது பெற்றோர்கள் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர். இறுதியில் கல்லூரி மாணவர்கள், இசை, நடன நிகழ்ச்சிகளை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தனர். அனைவருக்கும் சிற்றுண்டிகள், தேநீர், குளிர்பானம் என்பன பரிமாறப்பட்டிருந்தன.
2014ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் திரு. அரிகரன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டு வரும் வரிசையில் இம்முறை 5வது ஆண்டாக திரு.அரிகரன் அவர்களுடைய உதவியுடன் இப்பாராட்டு விழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாராட்டிக் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் விபரம்:
1.செல்வி டிலானி கார்த்திகேசு – சபரகமுவ பல்கலைக்கழகம்
முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம்
2.செல்வி யாழினி நடேசு – யாழ். பல்கலைக்கழகம்
கலைப்பீடம்
3.செல்வன் மகீபன் பஞ்சராசா – யாழ். பல்கலைக்கழகம்.
இசைத்துறை
4.செல்வன் வினோதன் கனகலிங்கம் – யாழ். பல்கலைக்கழகம
அரசியல் விஞ்ஞானம்;
5.செல்வன் பாலசயந்தன் கோமளேஸ்வரன் – மட்டக்களப்பு பல்கலைக்கழகம்,
உயிர்முறைமைகள் தொழில்நுட்பம்
6.செல்வி டர்மிதா யோகநாதன் – கொழும்பு பல்கலைக்கழகம்
உயிர் முறைமைகள் தொழில்நுட்பம்
7.செல்வன் நாகரஞ்சன் தர்மலிங்கம் – யாழ். பல்கலைக்கழகம்
முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம்
8.செல்வி சரண்யா பேரின்பநாயகம் – யாழ். பல்கலைக்கழகம்
கலைப்பீடம்
9.செல்வி யுசிதா யோகரத்தினம் – மட்டக்களப்பு பல்கலைக்கழகம்
கலைப்பீடம்
10.செல்வன் கோகுலன் சிவசக்திவேல் – யாழ். பல்கலைக்கழகம்
பாராட்டு விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொளியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்காணொளி விரைவில் இங்கே எடுத்துவரப்படும்.
No Responses to “பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற மாணவர்களுக்கு அமரர் S.P.சுப்பிரமணியம் ஞாபகார்த்த உதவித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பாராட்டு விழா.”