காரை.இந்துவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு திறன் வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 08-03-2019 வெள்ளிக்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வைபவத்திற்கு முன்னதாக மடத்துக்கரை அம்பாள் ஆலயத்தில் அனைவரும் விசேட பூசை வழிபாட்டில் கலந்துகொண்டுவிட்டு பூசையில் வைக்கப்பட்டிருந்த அடிக்கல் நாட்ட பயன்படுத்தப்பட்ட கற்களை எடுத்துக்கொண்டு வைபவ இடத்திற்கு வந்துசேர்ந்தனர். தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.இளங்கோ அவர்கள் முதலாவது அடிக்கல்லினை நாட்டி வைத்திருந்தார். இவரைத் தொடர்ந்து அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, ஓய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு, முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன், உப அதிபர் திரு.லிங்கேஸ்வரன், யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.ரி.மதிவதனன், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி ஆகியோர் உள்ளிட்ட வேறும் பலருடன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் அடிக்கல்லினை நாட்டிவைத்தனர். மடத்துக்கரை அம்பாள் ஆலய குருவும் கல்லூரியின் ஆசிரியருமாகிய திரு.சரவணபவானந்த சர்மா அவர்கள் சமயரீதியான நிகழ்வுகளை சிறப்பாக நடத்திவைத்திருந்தார்.
இவ்வைபவத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “திறன் வகுப்பறைகளுக்கான( Smart Classrooms) அடிக்கல் நாட்டும் வைபவத்தில் வலயப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.”