பழைய மாணவர் சங்க கனடாக்கிளையின் உதவிச் செயலாளரான திருமதி அனுசூயா ஞானகாந்தன் தனிப்பட்ட பயணத்தினை மேற்கொண்டு தாயகம் சென்ற சமயம் காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சென்று அதனைத் தரிசித்ததுடன் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களுடன் சங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற உதவிகள் பாடசாலையின் கல்வித் தரத்தில் ஏற்படுத்தி வருகின்ற முன்னேற்றகரமான நிலை குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
அதேவேளை பாடசாலையின் நடைமுறைச் செலவீனங்களுக்கு உதக்கூடிய வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தற்போது தீவிர முயற்சிகளை தற்போதய பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக இவ்வுரையாடலின்போது உதவிச் செயலாளர் அதிபரிடம் தெரிவித்ததுடன் இதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்குரிய ஒத்துழைப்பினை தாய்ச் சங்க நிர்வாகம் வழங்கும் என்ற நம்பிக்கையினையும் வெளியிட்டார்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக்கிளையினால் பாடசாலையின் மேம்பாடு கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உன்னதமான பணிகளை வெகுவாகப் பாராட்டிய அதிபர் இச்சங்கத்தின் வரலாற்றுரீதியான உதவிப் பணிகள் காரணமாக கல்லூரிச் சமூகம் எதிர்கொண்ட சவால்களும் சிரமங்களும் நீங்கி கல்லூரியை துரித வளர்ச்சியை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு உதவிவருவதாகக்; குறிப்பிட்டு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார். சங்கம் முன்னெடுக்கின்ற பணிகளிற்கு அதிபர் வழங்கிவருகின்ற சிறந்த ஒத்துழைப்பினைப் பாராட்டி நன்றியினையும் உதவிச் செயலாளர் திருமதி அனுசூயா ஞானகாந்தன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் தெரிவித்துக்கொண்டார். திருமதி அனுசூயா ஞானகாந்தன் இக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிபருடன் அவரது அலவலகத்தில் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட படங்களையும் அதிபர் மற்றும் உப அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தினையும் கீழே பார்வையிடலாம்:
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளை உதவிச் செயலாளரின் கல்லூரிக்கான பயணம்”