காரைநகர் ஊரி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
ஊரி அ.மி.த.க பாடசாலையில் முதன்முறையாக ஒரே தடவையில் நான்கு மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்திருந்தனர். இம்மாணவச் செல்வங்களையும் அவர்களைப் பயிற்றுவித்து சித்தியடைச் செய்த ஆசிரியமணிகளையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்விலேயே எமது அதிபரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
ஊரி அ.மி.த.க பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் தமது இடைநிலை, உயர்நிலைக் கல்வியை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்திலேயே தொடர்வதுடன் இவர்களுள் பலர் பல்வேறு துறைகளிலும் பிரகாசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய கல்விச் சமூகமும் ஊரி அ.மி.த.க பாடசாலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்துவதுடன் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியமணிகளையும் பாராட்டுகின்றது.
அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே காணலாம்.
No Responses to “ஊரி அ.மி.த.க பாடசாலையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வில் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்”