நான் தாயகப் பயணத்தினை மேற்கொண்டிருந்ததினால் கடந்த இரு மாதங்களாக தங்ளது சங்கத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.
சங்கத்தின் 5வது ஆண்டு விழாவுக்கு சிறப்பான செய்தி தர தயாராகவிருந்தேன். அது நிறைவேறவில்லை. ஏனையோர் எழுதிய செய்திகளை வாசித்துப் பிரமித்துப்போனேன். ஐந்து வருடகாலத்தில் தங்களது சங்கம் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளதையிட்டு பெருமை அடைகின்றேன். வேறு எந்தக் கல்லூரிகளும் குறுகிய காலத்தில் இத்தகைய பணிகளை ஆற்றியதாகத் தெரியவில்லை. இத்தகைய சாதனை நிலைநாட்டப்பட்டமைக்கு தங்களிடையே நிலவிய இறுக்கமான ஒற்றுமையே காரணம் எனக் கருதுகின்றேன். தொடர்ந்தும் ஒற்றுமையும் ஒன்றுபட்ட உழைப்பும் வளர வாழ்துகிறேன்.
ஆறாவது ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பத்; தவறிவிட்டேன்.
நான் காரைநகரில் நிற்கும்போது காரை. இந்துக் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களைச் சந்தித்து உரையாடியது சந்தோசமான தருணமாகவிருந்தது. கனடா பழைய மணவர் சங்கத்தின் பணிகளை அவர் வெகுவாகப் பாராட்டியதுடன் இந்துக் கல்லூரி பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருவதாகக்குறிப்பிட்டார். அதிபர் கல்லூரியின் வளர்ச்சிக்காக உற்சாகத்துடன் உழைப்பதாக அறிந்தேன்.
கல்லூரியில் உள்ள நூல் நிலையத்திற்கு என்னிடமுள்ள முக்கிய நூல்களைத் தருவதாகக் கூறி விடைபெற்றேன்
No Responses to “காரை.இந்துவின் மூத்த பழைய மாணவனும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயற்பாட்டில் அக்கறையுடன் ஈடுபாடு காட்டி வருபவருமாகிய திரு.ஐ.தி.சம்பந்தன் பாடசாலைக்கான பயணத்தின் பின்னர் அனுப்பிவைத்துள்ள செய்தி”