எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் சயம்பு, தியாகராஜா, நடராசா, பாரதி ஆகிய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுனர் போட்டி கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போட்டியின் பிரதம விருந்தினராக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளரும் முன்னாள் கிராம அபிவிருத்தி அதிகாரியுமாகிய கனக.சிவகுமாரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், தீவக கல்வி வலயத்தின் உடற்கல்விக்கான சேவைக்கால ஆலோசகர் செல்வி ரி.துஸ்யா அவர்கள் சிறப்பு விரந்தினராகவும், பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவரும் நிதி முகாமையாளருமாகிய திரு.குழந்தைவேலு அன்புச்செல்வன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரும், முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவருமாகிய குழந்தைகள் மருத்துவநிபுணர் வி.விஜயரத்தினம் அவர்களினால் 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் 4வது ஆண்டாக இவ் மெய்வல்லுனர் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
போட்டிக்கான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள காரை.இந்துவின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுனர் போட்டி.”