எமது கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியற்கல்லூரி சென்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு 21.09.2018 அன்று காலை 8.30 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக பழைய மாணவர் சங்க கனடாக்கிளை பொருளாளர் திரு மா. கனகசபாபதி அவர்களும், எமது பாடசாலையின் முன்னாள் அதிபரும், பழைய மாணவர் சங்க உபதலைவருமாருமான பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை அவர்களும், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 07 மாணவர்களுக்கும், 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற 05 மாணவர்களுக்கும், 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியற்கல்லூரி சென்ற மாணவர்களுக்கும் பரிசிலகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இப் பரிசில்களை வழங்குவதற்கு பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை முழுமையான நிதியுதவியினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.
No Responses to “2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியற்கல்லூரி சென்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு”