கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளாராக திரு அருணாசலம் செல்வரத்தினம் கடமையாற்றிய காலத்தில் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியவரும் கல்லூரியின் பழைய மாணவரும் ஆகிய பண்டிதர்.மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு அனுப்பி வைத்த கண்ணீர் அஞ்சலியை இங்கே தருகின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
அருணாசலம் செல்வரத்தினம் அவர்களின் மறைவுச்செய்தி எம்மை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தன் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் செயல்வீரராகவும் விளங்கிய இவர் இன்றில்லை என்னும்போது மனம் வருந்துகின்றது. இவர் 1997 முதல் 1999ம் ஆண்டு வரை கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்கச் செயலாளராகவும் விளையாட்டுப் பயிற்சியாளராகவும் கடமையாற்றினார்.
அவசரகாலச்சட்டம், ஊரடங்குச்சட்டம், கடற்படையினரின் அடக்குமுறை ஆகியன இருந்த வேளையில் கல்லூரியை சிறப்பாக நடத்துவதற்கு அதிபராக விளங்கிய எமக்கு ஆலோசனைகள் தந்து உதவினார். மாணவர்களுக்கு மெய்வல்லுநர் பயிற்சி, உதைபந்தாட்டப் பயிற்சி ஆகியன வழங்கி அத்துறைகளில் உயர்வடையச் செய்வதற்கு பெரிதும் உதவியுள்ளார்.
இக்கல்லூரியில் பயின்ற காலத்தில் உதைபந்தாட்டக் குழுவின் தலைவராக (ஊயிவயin) பல வருடங்களாகச் செயற்பட்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவராவர். இவரின் மறைவு எமக்குப் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரக் கூத்தனை இறைஞ்சுகின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
மு.சு.வேலாயுதபிள்ளை
ஓய்வுநிலை அதிபர்
யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி
காரைநகர்.
No Responses to “திரு.அருணாசலம் செல்வரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர்.மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் கண்ணீர் அஞ்சலி”