காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5ஆவது ஆண்டு விழாவும் சுப்பர் சிங்கர் ஷ்ரவணின் ‘இசை அருவி’ சிறப்பு நிகழ்ச்சியும் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.05.2018) அன்று மாலை 5:30 இற்கு கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் சிறப்பு இசை நிகழ்ச்சியாக இடம் பெறவிருக்கும் ‘இசை அருவி’ யில் பாடவிருக்கும் சுப்பர் சிங்கர் ஷ்ரவண் சென்னையிலிருந்து இன்று மாலை ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தை வந்தடைந்தார். இவரை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் பொன்னாடை போர்த்த, பதில் தலைவர் திரு.நா.குஞ்சிதபாதம் அவர்கள் மலர்ச்செண்டு வழங்கி பாடகர் ஷ்ரவணை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “ரொரன்ரேர வந்தடைந்த சுப்பர் சிங்கர் ஷ்ரவணை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகசபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.”