காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வெள்ளி விழா நிகழ்வு எதர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தையிலுள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் சி.நேசேந்திரன் தலைமையிலான சங்க நிர்வாகம் செய்துள்ளது. இச்சங்கத்தின் செயலாளராக ஸ்ரீலங்கா கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஓய்வுநிலைப் பணிப்பாளர்நாயகம் னுச.ஆறுமுகம் சிவசோதி அவர்களும் பொருளாளராக கொழும்பு மாநகரசபையில் முகாமைத்துவ உதவியாளரான திரு.நாகரத்தினம் கணநாதன் அவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இராப்போசன விருந்துடன் நடைபெறவுள்ள இவ்விழாவில் தமிழகத்தின் பிரபல்யம்மிக்க எழுச்சிப் பேச்சாளரான (Motivational Speaker) பட்டிமன்றம் புகழ் ‘சொல்லின்செல்வர்’ பி.மணிகண்டன் அவர்கள் கலந்துகொண்டு ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற பொருளில் சிறப்புரையாற்றவுள்ளார். காரை.இந்து அன்னையின் அரவணைப்பில் வளர்ந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கும், வகித்த தலைநகர் கொழும்பில் வதியும் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பதிவுசெய்தள்ளதாக அறியமுடிகிறது. காரைநகரிலிருந்து காரை.இந்துவின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களுடன் தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகளும் இவ்விழாவில் கலந்துகொள்ள கொழும்பு செல்கின்ற ஆதேவேளை வவுனியாவிலிருந்தும் காரை.இந்து அன்னையின் புதல்வர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக கொழும்புக் கிளையின் தலைவர் திரு.சி.நேசேந்திரன் தெரிவித்தார்.
இவ்விழாவில் ஜனாதிபதி றணில் விக்கிரமசிங்க அவர்களின்; மேலதிகச் செயலாளரான திரு. வி.இளங்கோவன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவரும் காரை.இந்துவின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனைகொண்டு பல்லாற்றாலும் உதவியளித்து வருபவருமாகிய தொழிலதிபர் சி.நேசேந்திரன் அவர்களது முழுமையான அனுசரணையுடனேயே தமிழகப் பேச்சாளர் பி. மணிகண்டன் அவர்களது பயணம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்தாகும்.
விழா குறித்த அறிவித்தல்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வெள்ளி விழாவில் தமிழகத்தின் எழுச்சிப் பேச்சாளர் ‘சொல்லின்செல்வர்’ மணிகண்டனின் சிறப்புரை.”