2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் காரை.இந்துவைச் சேர்ந்த ஆறு மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளதாக அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அறியத்தந்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிட்ட ஆறு மாணவர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலிலிருந்து மேலும் சிலருக்கு அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிபர் தெரிவித்தார்.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் செல்வி விஜயகுமார் கஜந்தினி என்ற மாணவி கணித பாடத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களையும் அவர்களை தயார்படுத்தி விட்ட ஆசிரியர்களையும் நெறிப்படுத்திய அதிபரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள், பாடத்துறை, தெரிவான பல்கலைக்கழகம் ஆகிய விபரங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவின் ஆறு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.”