ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள எமது கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் தாய்ச் சங்கத்தினராகிய நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
2012ம் ஆண்டு கல்லூரி அதிபராக இருந்த திரு பொ. சிவானந்தராசா அவர்களின் பெருமுயற்சியினாலும், அப்போதைய போஷகராக இருந்த திரு S. K. சதாசிவம் அவர்களின் பெருமுயற்சியினாலும் உருவாக்கப்பட்டு பாடசாலையின் கல்விசார் செயற்பாடுகளுக்கான நிதிப்பங்களிப்பினை எமது தாய்ச்சங்கத்தினூடாக கடந்த 5 வருடங்களாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பரிசில் தினத்தை நடாத்துவதற்காக தங்களது சங்கத்தின் முயற்சியினால் “வைத்தியகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம் நம்பிக்கை நிதியம்” உருவாக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். இதன்மூலம் பரிசில்தினம் சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மின் கட்டணம், இணையத்தள கட்டணம், நினைவுப்பரிசில்கள், க.பொ.த சாதாரண, க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரிசில்கள், அலுவலக உதவியாளர் வேதனம், இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு அவ்வப் போது வேண்டப்படும் போது உதவிகள் வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலை நிகழ்வுகளை தமது இணையத்தளத்தினூடாக அவ்வப் போது வெளிப்படுத்தி பாடசாலையின் பெருமையை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தி வருகின்றமை பெருமைக்குரிய விடயமாகும்.
இச் சங்கமானது மேன்மேலும் வளர்ந்து காரை இந்துவின் செயற்பாடுகளுக்கு உதவி புரிய வேண்டுமென வேண்டுகின்றோம்.
ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை கனடா பழைய மாணவர் சங்கத்தினை நிர்வகித்துவரும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்து தங்களது அர்ப்பணிப்பான சேவையினைப் பாராட்டி நிற்கின்றோம்.
மேலும் இறைவனின் ஆசி வேண்டி எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானின் பாதக்கமலங்களைப் பணிந்து நிற்கின்றோம்.
நன்றி.
திருமதி சிவந்தினி வாகீசன் திரு ந. பாரதி திரு க. நிமலதாஸன்
தலைவர் செயலாளர் பொருளாளர்
முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு தாய்ச் சங்கம் வழங்கிய வாழ்த்துச் செய்தி”