நெஞ்சே நீ வணங்காய் ……….
எம் ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு வகையில்,நாம் பயின்ற கல்விக் கூடங்கள் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவு புகட்டி உள்ளன. விஞ்ஞானியில் இருந்து மெய்ஞானிவரை.
மாதா, பிதா,குரு, தெய்வம். மாதா பிதாவை அடையாளம் காட்டுகிறாள், பிதா குருவை அடையாளாம் காட்டுகிறான், குரு தெய்வத்தை தெரிய வைக்கின்றார். ஆகவே இங்கே கல்வி என்பது தெய்வத்துக்கு ஈடாகின்றது
ஆம் உண்மைதான் எங்களது ஒவ்வொரு கல்விக் கூடமும் சமுதாயத்தின் ஒரு கோவில் தான். இன்று தனது 125வது அகவையை எட்டியுள்ள எங்கள் யா/கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயமும் எங்கள் ஊர் மக்களுக்கு மட்டுமல்ல, பல அயல் ஊரவர்க்கும் இது ஒரு கோவில் ஆகத்தான் இருந்து வந்திருக்கின்றது. இற்றைக்கு 125 வருட காலம் பல இன்னல்கள், இடையூறுகளையும் தாண்டி வந்து இன்று தனது 125வது அகவையை ஒரு மலர் வெளியீட்டுடன் கொண்டாடுகின்றது என்றால் உண்மையில் எமது மண் பெருமையடைகின்றது.
இக் கல்லூரி மேன்மேலும் வளர்ந்து இன்னும் பல கல்விமான்களை உருவாக்கி சாதனைகள் படைக்க வேண்டுமென்று மனதாற வாழ்த்துகின்றோம்.
குருவை சோதிப்பவன் – பார்வையாளன்
குருவை கண்டுகொண்டவன் – பக்தன்
குருவை புரிந்து கொண்டவன் – சீடன்
நாம் அனைவரும் பக்தியுடன் கூடிய சீடர்களாக இருப்போம் இனிமேலாவது.
நன்றி.
வணக்கம்
நிர்வாகசபை
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
No Responses to “125 ஆவது ஆண்டு விழா காணும் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்கு பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம் வாழ்த்து”