கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய குடியியல் கல்விப் பாடத்தின் ஓர் அங்கமாக மாணவர் பாராளுமன்றத் திட்டம் பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் செயற்பாட்டு ரீதியான அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பாக பாராளுமன்றத் திட்டம் அமைந்துள்ளது. ஜனநாயகம் அதன் பொறுப்புக்கள், சட்டத்தின் மேலாதிக்கம், வாக்கின் முக்கியத்துவம் என்பவற்றை உணர வைப்பதுடன் மாணவர்களின் பலதரப்பட்ட திறன்களை மேம்படுத்துவதே மாணவர் பாராளுமன்றத் திட்டத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் இவ்வாண்டுக்கான அமர்வு கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமையில் சென்ற 17-08-2023 அன்று காலை 8.30 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நiடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வலிகாமம் கல்வி வலயத்தின் ஓய்வுநிலை வலயப் பணிப்பாளர் திரு.சு.சுந்தரசிவம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ற்ரன் கல்லூரியின் அதிபர் திருமதி கௌரியாம்பாள் அருள்மொழி அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் திரு.கி. விஜயேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகரான செல்வன் ஞா.தயாபரன் அவர்களும் பிரதமரான செல்வி வி.அபிராமி அவர்களும் பிரதி சபாநாயகரான செல்வன் இ.கஜீபன் அவர்களும் சபை முதல்வரான செல்வி செல்வி சா.தவலோசனா அவர்களும் மற்றும் அமைச்சர்களும் இவ் அமர்வில் சமூகமளித்திருந்தனர்.
விருந்தினர்கள் மாணவர் பாராளுமன்றத் திட்டத்தின் நோக்கம் செயற்பாடு என்பன445 குறித்து விளக்கமளித்து உரையாற்றினர்.
இவ் அமர்வின் இறுதியில் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான ஆசிரியையான செல்வி வி.கிரிஜா நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்து மாணவர் பாராளுமன்றத்தின் இவ்வாண்டுக்கான அமர்வு கல்லூரியின் அதிபர் தலைமையில சிறப்பாக நடைபெற்றது.”