கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை காலை Scarborough Civic Centre ல் நடாத்தப்பட்டிருந்த பேச்சுப் போட்டி, பொதுஅறிவுப் போட்டி என்பவற்றில் திரளான போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர். பாலர் பிரிவு, கீழ்ப் பிரிவு, மத்திய பிரிவு, மேற் பிரிவு என நான்கு பிரிவுகளாக நடாத்தப்பட்டிருந்த போட்டிகளில் பேச்சுப் போட்டியில் பங்குபற்றி ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்ற முதல்மூன்று போட்டியாளர்களது பெயர்களும் அறிவிக்கப்பட்டிருந்ததுடன் பொது அறிவுப் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களின் பெயர் விபரங்கள் இவ்விணையத்தளம் ஊடாக ஓருவார காலத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிற்கு வெற்றிக்கிண்ணங்களும் பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களிற்கும் ஊக்குவிப்பு பரிசில்களும் செப்ரெம்பர் 07ஆம் திகதி கனடா கந்தசாமி கோயில் கலை அரங்கில் நடைபெறவுள்ள கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிகழ்வுகளின்போது வழங்கப்படவுள்ளதுடன் பேச்சுப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலாவதாக வெற்றியீட்டியவர்கள் தமக்குரிய பேச்சினை பார்வையாளர்களிற்கு நிகழ்த்திக்காண்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் விழா அமைப்புக்குழுவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய பிரிவு போட்டியாளர்களிற்கு வெள்ளி விழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா என்ற தலைப்பிலும் மேற் பிரிவு போட்டியாளர்களிற்கு தாபகர் முத்து சயம்பு என்ற தலைப்பிலும் பேச்சுக்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்றோர் விபரம்:
பாலர் பிரிவு:
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பேச்சு, பொது அறிவுப் போட்டிகளில் திரளான போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி சிறப்பித்தனர்.”