.காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தினம் எதிர்வரும் 04-07-2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 8.30 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அதிபர் திரு. அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பரிசளிப்பு தினத்தின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரான திரு.சமன் பந்துலுசேனா அவர்களும் அவரது பாரியாரும்; சிறப்பு விருந்தினராக தீவக வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கம்சத்தானி விநோதன் அவர்களும் கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவரான பிரபல தொழிலதிபர் திரு.சி.நேசேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
காரை.இந்துவின் கீர்த்தி மிக்க பழைய மாணவனும் ரொறன்ரோவில் பிரபல குழந்தைகள் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருபவரும் சமூக ஆர்வலருமாகிய மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களால் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்ட மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் 10வது ஆண்டாக இப்பரிசளிப்பு தினம் நடைபெறவுள்ளது. காரை.இந்துவின் வரலாற்று உதவித் திட்டமாகிய “மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்” 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பின்னர் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு தினமானது நகர்ப்புறப் பாடசாலைகளிற்கு இணையாக வெகு விமர்சையாக நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பரிசளிப்பு தின அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவின் வருடாந்த பரிசளிப்பு தினம் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.”