கணக்கனார்கண்டி காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து கொழும்பில் வசித்து வந்தவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினரான ஓய்வுநிலை ஆசிரியர் திரு.அருளம்பலம் சிவானந்தநாதன் அவர்களின் அன்புச் சகோதரியும் சங்கத்தின் பொருளாளரான திருமதி பிரபா ரவிச்சந்திரன் அவர்களின் அன்பு பெரியதாய் உறவு முறையானவரும் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும் கொட்டாஞ்சேனை விவேகானந்தாக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஓய்வுநிலை பிரதி ஆணையாளருமாகிய திருமதி மகேஸ்வரிதேவி திருநாவுக்கரசு அவர்கள் 26-05-2023 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ள மரண அறிவித்தல் பின்னே இணைக்கப்பட்டுள்ளது:
மரண அறிவித்தல்
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”