காரை.மண்ணின் ஒப்பற் சேவையாளரும் காரை.இந்துவில் 25 ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றி வெள்ளி விழா அதிபர் என்ற பெருமைக்குரியவரும் காரை.இந்துவை உன்னதமான நிலைக்கு எடுத்து வருவதற்கு தளராது அர்ப்பணிப்புடன் உழைத்த பெருமகனுமாகிய கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நினைவு தின நிகழ்வு கல்லூரியின் சமூக விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று 25-05-2023 வியாழக்கிழமை நடைபெற்ற போது அன்னாரது மகத்தான பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டிருந்தது.
சமூக விஞ்ஞான மன்றத்தின் பொறுப்பாசிரியர் திரு ச.சுகந்தன் ஆசிரியரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு, அதிபர், பிரதி அதிபர் நினைவுச்சொற்பொழிவாளரான கல்லூரியன் பழைய மாணவனும் முன்னாள் ஆசிரியருமாகிய திரு ந.கணேசமூர்த்தி அவர்கள், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் கலாபூசணம் பண்டிதர் திரு மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள், கல்லூரியின் பழைய மாணவனும் காரைநகர் இ.போ.ச.சாலை ஓய்வுநிலை முகாமையாளருமாகிய திரு கந்தசாமி ஆகியோர் அமரரர் ஆ.தியாகராஜா அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து அதிபா திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் தொடக்கவுரையையும், திரு ந.கணேசமூர்த்தி அவர்கள் அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா பற்றிய நினைவுப்பேருரையினையும் நிகழ்த்தியதுடன் கலாபூசணம் பண்டிதர் திரு மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும், தியாகராஜா நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமாகிய செல்வி வி.விமலாதேவி அவர்களும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா புலமைப்பரிசில் நிதியத்தினால் காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “காரை.இந்துவில் நடைபெற்ற கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நினைவு தின நிகழ்வில் அன்னாரது மகத்துவம் மிக்க சேவை உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.”