காரைநகர் இந்துக் கல்லூரியை உன்னதமான நிலைக்கு எடுத்து வருவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளாக அயராது அர்ப்பணிப்புடன் உழைத்து மகத்தான சாதனைப் பணிகள் புரிந்த ஒப்பற்ற அதிபர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நினைவு தின நிகழ்வு எதிர்வரும் 25-05-2023 வியாழக்கிழமை அன்று கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கல்லூரியின் சமூக விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் ஆசிரியரும் சிறந்த பேச்சாளருமாகிய திரு.நடராசா கணேசமூர்த்தி அவர்கள் தியாகராஜா அவர்களின் நினைவுரையை நிகழ்த்தவுள்ளார்கள்.
இந்நிகழ்வு தொடர்பாக நிகழ்ச்சிநிரலுடன் கூடிய அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது;
No Responses to “காரை.இந்து சமூக விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்ற வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின் நினைவு தின நிகழ்வு.”