சைவபரிபாலன சபையினால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியிலும் திருக்குறள் மனனப் போட்டியிலும் காரை.இந்துவின் மாணவர்கள் நால்வர் வெற்றிபெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். செல்வன் கருணராசா கோபாலகிருஸ்ணன், செல்வி கமலினி சாம்பசிவம், செல்வி டனுசியா ஜெகதீஸ்வரன், செல்வி ரூபிகா பூபாலசிங்கம் ஆகிய வெற்றிபெற்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை கூடவே இம்மாணவர்களை தயார்படுத்திவிட்டிருந்த ஆசிரியர்களையும் நெறிப்படுத்திய அதிபரையும் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
மாணவர்கள் பெற்ற வெற்றிநிலை விபரங்கள்:
செல்வன் கருணராசா கோபாலகிருஸ்ணன் – திருக்குறள் மனனம் – 3ம் இடம்
செல்வி கமலினி சாம்பசிவம் – திருக்குறள் மனனம் – 2ம் இடம்
செல்வி டனுசியா ஜெகதீஸ்வரன் – பண்ணிசை – 2ம் இடம்
செல்வி ரூபிகா பூபாலசிங்கம் – 3ம் இடம்
வெற்றியாளர்களான செல்வன் கோபாலகிருஸ்ணன், செல்வி கமலினி, செல்வி டனுசியா, செல்வி ரூபிகா ஆகியோர் முறையே கலாநிதி ஆறுதிருமுருகன், இரா செல்வவடிவேல், எஸ்.தயாபரன், பேராசிரியர் கலாநிதி சண்முகதாஸ் ஆகியோரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
வெற்றியாளர்கள் தமக்குரிய சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “சைவபரிபாலன சபை மாகாண மட்டத்தில் நடாத்திய பண்ணிசை திருக்குறள் ஆகிய போட்டிகளில் காரை.இந்துவின் மாணவர்கள் நால்வர் வெற்றிபெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்”