காரைநகர் இந்துக் கல்லூரி இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை சென்ற 15-05-2023 அன்று இந்துமாமன்றத்தின் தலைவரின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து கல்லூரியின் உப-அதிபர் திருமதி அரூபா ரமேஸ் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் பேச்சுக்களும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களை பண்ணோடு இசைத்தமையும் இடம்பெற்றன.
ஓய்வுநிலை அதிபரும் கல்லூரியின் முன்னாள் ஆசரியரும் சைவசமய உணர்வாளருமாகிய காரைநகர் மணிவாசகர் சபைச் செயலாளர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்து இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற திருநாவுக்கரசு நாயனார் குருபூசை.”