எமது சங்கத்தின் மூத்த உறுப்பினரும், சங்கத்தின் பணிகளில் மிகுந்த கரிசனையும் ஆர்வமும் கொண்டு ஆதரவளித்து உதவி ஊக்குவித்து வருபவருமான துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை பிரதம காசாளரான திரு.முருகேசு சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும,; சங்கத்தின் மற்றொரு உறுப்பினரும் அனுசரணையாளருமாகிய காசிப்பிள்ளை சக புத்திரர்கள் துரித பணமாற்றுச் சேவை நிறுவனத்தின் முதல்வர் திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும் இன்னோர் உறுப்பினரான பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திரு.தா.அருட்செல்வன் அவர்களின் அன்பு மாமியாருமாகிய சிவபாக்கியம் அவர்கள் நேற்று 26-04-2023 புதன்கிழமை அன்று ரொறன்ரோ, கனடாவில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
எமது நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் இணையத்தளத்தில் அன்னாரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ள மரண அறிவித்தலை பின்னே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”