காரை.இந்துவில் ஆறாம் தரத்தில் அனுமதியைப் பெற்றுக்கொண்ட 69 மாணவர்களை வரவேற்ற கால்கோள் விழாவானது ஏழாம் தர மாணவர்களின் ஏற்பாட்டில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சென்ற 21-04-2023 அன்று நடைபெற்றிருந்தது.
69 மாணவர்களுள் 13மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று வெவ்வேறு வகுப்புக்களில் கற்று வருகின்ற 36 மாணவர்களிற்கு பொறியிலாளர் மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் மாதாந்த உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாகச் சேர்ந்துள்ள 13 மாணவர்களிற்கும் குறித்த மாதாந்த உதவியினை வழங்குவதற்கு பொறியியலாளர் மகேஸ்வரன் முன்வந்துள்ளமை பாராட்டிற்குரியதாகும்.
69 புதிய மாணவர்களும் மலர்ச்செண்டு வழங்கி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் அதிபருடன் உப-அதிபர், மூத்த ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தரம் 6 மாணவர்களினால் இறை வணக்கம் நிகழ்த்தப்பட்டது. அதிபர் தனது தலைமையுரையில் பாடசாலையின் வரலாற்றினை புதிய மாணவர்களிற்கு தெளிவுபடுத்தியதுடன் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தரம் ;6, தரம் 7 ஆகிய மாணவர்கள் பேச்சு, பாடல், நடனம் என தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர். ஏற்புரை, நன்றியுரை என்பவற்றுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
தரம் 6, தரம் 7 மாணவர்களிற்கு பேனாக்கள் வழங்கப்பட்டதுடன் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “ஆறாம் தரத்தில் அனுமதியைப் பெற்றுக்கொண்ட 69 மாணவர்களை வரவேற்ற கால்கோள் விழா அதிபர் ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.”