மல்லிகை, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது நெல்லியடியில் வசித்து வந்தவரும் காரை.இந்துவின் சிறந்த விளையாட்டு வீரனும், உதை பந்தாட்ட அணியில் இடம்பெற்று அதன் பல வெற்றிகளிற்கு காரணமாக இருந்து செயற்பட்டவரும் நீளம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவருமாகிய கோவிந்தராஜன் (மேற்கு ஜேர்மனி) அவர்களதும் கல்லூரியின் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவரும் கல்லூரியின் மாணவ தலைவியாக பணியாற்றியவரும் முன்னாள் கொழும்பு சர்வதேசப் பாடசாலை ஆசிரியையுமாகிய சபாநாயகி (ஹொலண்ட்) அவர்களினதும் அன்புத் தாயாருமான திருமதி சபாரத்தினம் செல்லம்மா அவர்கள் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்”