பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முதன்மை அனுசரணையாளர்களுள் ஒருவரான தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் தான் கற்ற தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான அமரர் சி.குமாரவேலு அவர்களின் ஞாபகார்த்தமாக ஊக்குவிப்பு உதவித் திட்டத்தினை ஐந்து இலட்சம் ரூபாவினை வங்கியில் வைப்பிலிட்டு 2021ஆம் ஆண்டு தொடக்கி வைத்திருந்தார். க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு 2022 ஆம் ஆண்டு தோற்றி சித்தியடைந்த 48 மாணவர்களிற்கான ஊக்குவிப்பு உதவி ரொக்கமாக மாப்பாணவூரி நாச்சியம்மன் ஆலயத்தில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது. சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களிற்கு மட்டுமல்லாது சித்திபெற்ற அனைத்து மாணவர்களிற்கும் இவ் ஊக்குவிப்பு நிதியினை வழங்க விரும்பிய திரு.மகாதேவன் அவர்கள் இதற்காக ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவினை உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மகாதேவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்ற அவர்களது பரம்பரைக் கோயிலான நாச்சி அம்மன் ஆலயத்தின் 1008 சங்காபிசேகம் நடந்தவேளையில் ஆலயத்தில் வைத்து இவ் ஊக்குவிப்பு உதவி வழங்கப்பட்டிருந்தது. ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று காரை இந்துவில் கற்று வருகின்ற 36 மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான உதவித் திட்டம் மகாதேவனின் சகோதரனும் பழைய மாணவனுமாகிய பொறியியலாளர் மகேஸ்வரன் அவர்களின் முழுமையான அனுசரணையில் இவ்வாலயத்தில் சென்ற ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன் இந்நிகழ்வில் பொறியியலாளர் மகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
மகாதேவன் அவரது சகோதரன் பொறியியலாளர் மகேஸ்வரன் அவர்களது தாயாரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினருமாகிய திருமதி ஜெயமணி பாலசுப்பிரமணியம் தந்தையார் திரு.பாலசுப்பிரமணியம், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக உறுப்பினர் திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன், பொதுச்சபை உறுப்பினர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன், தாய்ச் சங்கத்தின் செயலாளர் திரு.நிமலதாசன் கணபதிப்பிள்ளை ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களிற்கான ஊக்குவிப்புத் நிதியினை வழங்கி வைத்திருந்தனர்.
ஊக்குவிப்பு நிதியினை வழங்குவதற்கு முன்வந்து உதவிய தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களிற்கு அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
படத்தொகுப்பிலுள்ள ஒரு படத்தின்மீது அழுத்தி Slide Shaw முறையிலும் அனைத்துப் படங்களையும் தெளிவாகப் பார்வையிடலாம்:
https://photos.app.goo.gl/Y68CWdXyyGEUpN3H9
No Responses to “தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற 48 மாணவர்களிற்கு குமாரவேலு மாஸ்டர் ஞாபகார்த்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.”