சென்ற ஆண்டு நடைபெற்றிருந்த க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் இணைய வழி ஊடாக வெளியிடப்பெற்றிருந்தது. இதனடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய செல்வி விதுசாளினி தபேந்திரன் அவர்கள் 9A என்ற சித்தியினைப் பெற்று தீவக வலய மட்டத்தில் முதன்மை மாணவியாக விளங்குகின்றார்.
காரை.இந்தவிற்கு பெருமை சேர்த்த செல்வி விதுசாளினி அவர்களையும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஏனைய மாணவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதுடன் இவர்களிற்கு கற்பித்த ஆசிரிய மணிகளையும் சிறந்தமுறையில் நெறிப்படுத்திய அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களையும் கூடவே பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதல் ஏழு மாணவர்கள் விபரம்:
1) செல்வி விதுசாளினி தபேந்திரன் – 9A
2) செல்வன் பரமநாதன் சாரங்கன் – 8A, C
3) செல்வி சரண்ஜா ஜெயமோகன் – 7A, 2B
4) செல்வி ஜெனிதா சடாச்சரம் – 5A, B, 3C
5) செல்வி ஹர்ணி அருமைநாயகம் – 5A, 2B, 2C
6) செல்வி டயோசிகா புஸ்பானந்தராசா – 3A, 2B,,C,3S
7) செல்வி லஜனா சிறீகாந்தன் – 3A, 2B, C, 2S
No Responses to “தீவகக் கல்வி வலய மட்டத்தில் அதி சிறந்த பெறுபேற்றினைப் பெற்று காரை.இந்துவின் மாணவி செல்வி விதுசாளினி தபேந்திரன் சாதனை!”