அர்ப்பணிப்புடன் சேவையாற்றி பழைய மாணவர்களது நெஞ்சங்களில் நிலைத்து நிற்கின்ற காரை.இந்துவின் புகழ்பூத்த ஆசிரியரான அமரர் R.கந்தையா மாஸ்டர் அவர்களின் அன்பு மகளும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியையான அமரர் சிவபாக்கியம் நடராசா அவர்களின் அன்புச் சகோதரியுமாகிய திருமதி சரஸ்வதி மார்க்கண்டு அவர்கள் 16-09-2022 அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் ஆறியத்தருகின்றோம்!”