காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசல் தினம் சென்ற 08-09-2022 வியாழக்கிழமை அன்று கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம் உருவாக்கப்பட்ட பின்னர் இதன் அனுசரணையில் 7வது ஆண்டாக நடைபெற்ற இப்பரிசில் தினத்தின் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஞானசுந்தரன் அவர்களும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் ஒய்வுநிலை உப-அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்பரிசில் தினத்தின் ஆரம்பத்தில் அண்மையில் மறைந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவரான அமரர் முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பரிசளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் சிறப்பாக நடைபெற்ற பரிசில் தினம்.”