சுவிஸ் காரை அபி விருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் மாணவர்களின் ஆளுமைத்திறன்களை வளர்க்கும் ‘தியாகத் திறன் வேள்வி’-2022 செயற்திட்டத்தின் கீழ் கடந்த 2021ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் மற்றும் தொழிற் கல்விக்கான சந்தர்பங்களை வழங்கும் திறந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரிகள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் தமது தொழில் கல்வியை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காரைநகரின் இருபெரும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் ஓத்துழைப்புடனும் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் அ. ஜெகதீஸ்வரன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் திரு. க. பாலச்சந்திரன், ஓய்வு பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி, வடமாகாண நிலஅளவைத் திணைக்கள ஆணையாளர், திரு அ. சோதிநாதன், ஓய்வு பெற்ற வடமாகாண சபை பிரதிச்செயலாளரும், முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளருமான திரு. ப. விக்கினேஸ்வரன், சமாதான நீதவானும் யாழ்ற்ரன் கல்லூரி ஆசிரியருமாகிய சி.கிருபாகரன்,, தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர் வி. பிரேம்தாஸ்குமாரஸ்ரீ ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
காரைநகர் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்விற்கு ஓத்துழைப்பு நல்கிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் சுவிஸ் காரை அவிருத்திச்சபையினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
நிகழ்வின் நிழற்படத்தொகுப்பினை கீழே காணலாம்
No Responses to “சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் அனுசரணையில் வெகு சிறப்பாக நடைபெற்ற மாணவர்கள் கௌரவிப்பும் தொழில் வழிகாட்டலும்”