திரு முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். திரு மு.வேலாயுதபிள்ளை அவர்கள் எமது கல்லூரியின் கீர்த்திமிக்க ஒரு பழைய மாணவன். கல்விப்பின்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரியின் பழைய மாணவர்களில் உயர் பதவிநிலை வகித்தவர்களில் முதன்மையானவர்.
இவர் புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் வசித்த போதும் தான் கல்வி கற்ற கல்லூரியின் மீது அதீத அக்கறையுடையவராக இருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கனடாவில் உதயமாவதற்கு இவர் உறுதியாகச் செயற்பட்டார். கனடா பழைய மாணவர் சங்கம் உதயமாவதற்கு ஆரம்ப காலத்தில் காணப்பட்ட சவால்களைத் தனது புத்தி சாதூரியத்தால் வெற்றி கொண்ட பெருமைக்குரியவர்.
10 ஆண்டு கால கனடா பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சியில் திரு மு. வேலாயுதபிள்ளை அவர்களின் அர்ப்பணிப்பான சேவையும், வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் காத்திரமானவை. இவர் காரைநகருக்கு வருகை தந்த போதெல்லாம் கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரியின் தேவைகளைக் கேட்டறிந்து செயற்பட்டவர். இறுதியாக கனடா பழைய மாணவர் சங்க தலைவராக இவர் அமரத்துவம் அடைந்துள்ளார்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
No Responses to “திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவு குறித்து காரை.இந்துவின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் அனுதாபச் செய்தி.”