புதுறோட்டு, காரைநகரை பிறப்பிடமாகவும் கந்தானை, கிளிநொச்சி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்டிருந்தவரும் எமது சங்கத்தின் உறுப்பினரான திருமதி மாதங்கி (சாயி) லன்பிராங் கரன் அவர்களின் அன்பு மாமியும் மற்றொரு உறுப்பினரான திருமதி கனகமலர் நற்குணம் அவர்களின் அன்பு மைத்துனியும் எமது சங்கத்தின் முன்னாள் உப-தலைவர் திருமதி செல்வஇந்திராணி சித்திரவடிவேல் அவர்களின் அன்பு மாமியும் ஆகிய திருமதி நாகம்மா பாபறா சண்முகநாதன் 01-09-2022 வியாழக்கிழமை வெள்ளவத்தை, கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”