நேற்றைய தினம் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இணையம் ஊடாக வெளியிடப்பெற்றிருந்தன. இப்பெறுபேறுகளின் அடிப்படையில் காரை.இந்துவைச் சேர்ந்த வர்த்தகப் பிரிவு மாணவன செல்வன் தி.லுகிர்தன் அவர்கள் 3A என்ற சிறந்த பெறுபேற்றினைப் பெற்று காரை.இந்துவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதுடன் இப்பாடசாலையிலிருந்து தோற்றிய 13 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படக்;கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் அறியத் தந்துள்ளார்.
முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்ற செல்வன் லுகிர்தன் அவர்களையும் சிறந்தபெறுபேறுகளைப பெற்றுக்கொண்டு காரை.இந்து அன்னையைப் பெருமைப்படுத்திய அனைத்து மாணவர்களையும் இம்மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள காரணமாகவிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரிய மணிகளையும், சிறந்தமுறையில் வழிப்படுத்திய கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.
மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேற்று விபரங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 13 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்று காரை.இந்து சாதனை.”