வலந்தலை, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்தவரும் காரை.இந்து விளையாட்டு மைதானத்தின் பாவனைக்காக மைதானத்தின் மேற்குப் பக்கமாக உள்ள ஆறு பரப்புக் காணியினை தமது குடும்பத்துடன் இணைந்து அன்பளிப்பாக வழங்கி உதவியவரும், கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பல்வேறு உதவிகளை வழங்கி உதவிய பழைய மாணவனான திரு.வெற்றிவேலு நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும், கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி சுந்தரலிங்கம் மகாலட்சுமி அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”