மரண அறிவித்தல்
திரு.நாகலிங்கம் சுந்தரராஜன்.
தோற்றம்: 15-07-1939 மறைவு: 31-07-2022
மலேசியா கோலப்பிலாவைப் பிறப்பிடமாகவும், சம்பந்தர்கண்டி, காரைநகரைச் சேர்ந்தவருமான நாகலிங்கம் சுந்தரராஜன் அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் றோயல் விமானப்படை, றோயல் இலங்கை விமானப்படை, இலங்கை விமானப்படை, றோயல் ஓமான் பொலிஸ் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும், மாலைதீவு Fullmoon Resort Hotel இன் முன்னாள் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தரும்,
காலஞ்சென்ற (சம்பந்தர்கண்டி)நாகலிங்கம் – அமிர்தரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயதேவியின் (ஜெயம்)ஆருயிர்க் கணவரும்,
மஹாராஜா நிறுவனத்தின் முன்னாள் IT நிர்வாகி நடராஜனின் (கனடா) அன்புத் தந்தையும்,
கலைச்செல்வியின் (சூட்டி) அன்பு மாமனாரும்,
மதுரா, மாதேஸ், மகேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
திருமதி பொன்னம்பலம் ராஜராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற குமாரசாமி ( மலேசியா), காலஞ்சென்ற சந்திரலிங்கம் (ஓமந்தை), குஞ்சிதபாதம் (கனடா), பாலகிருஷ்ணன் (காரைநகர்), காலஞ்சென்ற ஜெயக்குமார் ஜேக்கப் விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி குமாரசாமி, காலஞ்சென்ற வாமதேவன், சரோஜினிதேவி சின்னராஜா ( கனடா), காலஞ்சென்ற மகாதேவன், கமலாதேவி சண்முகதாசன் (கனடா), காலஞ்சென்ற சகாதேவன், காலஞ்சென்ற பாலதேவன், இந்திராதேவி சிவபாதம் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜெயதேவி செல்வரத்தினம், காலஞ்சென்ற ஜெயதேவன், சத்தியதேவன் (கனடா), காலஞ்சென்ற நகுலதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தேவாஅமிர்தம் தம்பதியினரின் சம்பந்தியுமாவார்.
ஈமைக்கிரியைகள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை சம்பந்தர்கண்டியிலுள்ள அன்னாரது இல்லத்தில் முற்பகல் 8.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்ற பின்னர் அன்னாரது பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
நடராஜன் (மகன்) +1 (437) 221 9679
கலைச்செல்வி (சூட்டி – மருமகள்) +94 770798146
பாலகிருஷ்ணன் ( சகோதரன்) +94 740710123
குஞ்சிதபாதம் ( அப்பு – சகோதரன்) +1 (905) 201 0305
No Responses to “மரண அறிவித்தல், திரு.நாகலிங்கம் சுந்தரராஜன்.”