நெடுந்தீவை பிறப்பிடமாகவும் சுண்டிக்குளி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்து ரொறன்ரோ, கனடாவில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் உறுப்பினரான திரு.கந்தையா பஞ்சலிங்கம் (சிவமணி) அவர்களின் அன்பு மாமியாரும் யாழ்/சென் ஜோன்ஸ் பொஸ்கோ வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி கந்தையா இராஜேஸ்வரி அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்,
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”