காரை.இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டம் சென்ற 03-07-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. கோவிட் பெரும்பரவல் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நடைபெற்றிருந்த இப்பொதுக் கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் வரை கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளிற்கான செயற்பாட்டு அறிக்கையும் வரவு-செலவு அறிக்கைகளும் முறையே செயலாளர் கனக சிவகுமாரன் பதில் பொருளாளர் திரு.திருவேங்கடம் சந்திரசோதி ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
நிர்வாக சபைத் தெரிவினை தேர்தல் அலுவலரான சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள் நடாத்தி வைத்திருந்தார்.
சங்கத்தின் தலைவராக ஓய்வுநிலை பிரதி நிலஅளவையாளர் நாயகமான(Retired Deputy Surveyer General)) திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் தோற்றத்திற்கு உழைத்திருந்தவர் என்பதுடன் முன்னர் ஒருதடவை தலைவராக பணியாற்றியிருந்தவர் என்பதும் போசகராகவும் கணக்காய்வாளராகவும் பதவி வகித்து சங்கத்திற்கான தமது சேவையை வழங்கியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
செயலாளராக மீண்டும் திரு.கனக சிவகுமாரன் அவர்களும்
பொருளாளராக திருமதி பிரபா ரவிச்சந்திரன் அவர்களும் தெரிவானார்கள்.;.
நிர்வாக சபைக்குத் தெரிவான ஏனைய உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
உப-தலைவர்: திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம்
உதவிச் செயலாளர்: திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன்
உதவிப் பொருளாளர்:திரு.நடராஜா பிரகலாதீஸ்வரன்
நிர்வாக உறுப்பினர்கள்: திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம்
திரு.திருவேங்கடம் சந்திரசோதி
திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன்
திருமதி மங்களேஸ்வரி மகாதேவன்
திரு.செல்வரத்தினம் சிவானந்தன்
போசகர்: சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம்
கணக்காய்வாளர்: திருமதி அனுசூயா ஞானகாந்தன்.
கல்லூரியின் மேம்பாடு சார்ந்து பல உறுப்பினர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர் என்பதுடன் நிர்வாக சபைத் தெரிவின்போது அதில் விருப்புடன் பங்குகொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி இருந்தமை அவதானிக்க முடிந்தது. பல உறுப்பினர்களும் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
கல்லூரியின் தெற்கு வளாகத்தில் இரண்டு மாடிகளைக்கொண்டு அமைந்துள்ள சயம்பு மண்டப கட்டிடத்தில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு இடிந்து விழக்கூடிய அபாயமான நிலை குறித்து சில உறுப்பினர்கள் கவலை வெளியிட்டதுடன் இது விடயத்தில் கல்லூரிச் சமூகம் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க இக்கட்டிடத்தினை சரிசெய்ய முயற்சிக்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இக்கட்டிடம் அமைந்துள்ள பகுதி அபாயமான பகுதியாக அறிவிக்கப்பட்டு இங்கு நடைபெற்றிருந்த வகுப்புக்கள் அனைத்தும் வடக்கு வளாகப் பகுதிக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கட்டிடத்தின் எதிர்காலம் குறித்தும் இது தொடர்பில் எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் கல்லூரி அதிபரிடமிருந்து விபரங்களைப் பெற்று உறுப்பினர்களிற்கு தெரியப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் பொருளாளரான அமரர் மா.கனகசபாபதி அவர்களின் மறைவிற்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் காரை.இந்துவிற்கும் அன்னார் வழங்கிய அளப்பரிய சேவைகளையும் உதவிகளையும் நினைவுகூர்ந்து திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம், கனக சிவகுமாரன், திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன், திரு.நடராஜா பிரகலாதீஸ்வரன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
நிர்வாக சபை:
இடமிருந்து வலமாக (இருப்பவர்கள்): சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன்,பிரபா ரவிச்சந்திரன்,தி.விசுவலிங்கம், கனக சிவகுமாரன், நாகலிங்கம் குஞ்சிதபாதம்.
இடமிருந்து வலமாக (நிற்பவர்கள்): கனகரத்தினம் சிவபாதசுந்தரம், சிற்றம்பலம் சச்சிதானந்தன், திருவேங்கடம் சந்திரசோதி, செல்வரத்தினம் சிவானந்தன், நடராஜா பிரகலாதீஸ்வரன்
மங்களேஸ்வரி மகாதேவன்
அனுசூயா ஞானகாந்தன்
No Responses to “முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் தலைமையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் புதிய நிர்வாக சபை அமையப் பெற்றுள்ளது.”