சர்வதேச தாய்மொழித் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சும் பங்களாதேஸ் உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான கட்டுரை ஆக்கப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரியின் மாணவியான செல்வி வைஸ்ணவி குமாரசேகரன் பங்குபற்றியிருந்தார். தாய்-தாய்மொழி-தாய்நாடு எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்டிருந்த தேசியமட்டத்திலான இப்போட்டியில் பங்குபற்றிய வடக்கு மாகாண மட்டத்திலான போட்டியில் வெற்றிபெற்ற ஐந்து மாணவர்களுள் செல்வி வைஸ்ணவி குமாரசேகரன் அவர்களும் ஒருவராவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேசிய மட்டத்தில் பங்குபற்றியமைக்கான பாராட்டுச் சான்றிதழ் செல்வி வைஸ்ணவிக்கு வழங்கப்பட்டிருந்தது.
இச்சாதனை மூலம் கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வி வைஸ்ணவியை பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் பாராட்டி வாழ்த்துகிறார்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் செல்வி வைஸ்ணவியை பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.
இச்சான்றிதழைப் பெற்ற பின்னர் கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர் ஆகியோருடன் செல்வி வைஸ்ணவி காணப்படும் புகைப்படமும் சான்றிதழும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “சர்வதேச தாய்மொழித் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரை ஆக்கப் போட்டியில் காரை.இந்துவின் மாணவி செல்வி வைஸ்ணவி குமாரசேகரன் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை!”