சயம்பு வீதி, வலந்தலை, காரைநகரை பிறப்பிடமாகவும் சம்பந்தர்கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து தற்போது பம்பலப்பிட்டி, கொழும்பில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் போசகரான “சிவநெறிச்செல்வர்” தி.விசுவலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், எமது கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி நாகேசுவரி மகேசன் அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
குடும்பத்தின் சார்பிலான அன்னாரின் மரண அறிவித்தலும், ஈமைக் கிரியைகள் பற்றிய விபரமும் பின்னர் எடுத்துவரப்படும்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”