கனடா மிசிசாகா நகரில் சைவ சித்தாந்த மன்றம் என்கின்ற அமைப்பினை நிறுவி அதன் தலைவராகவும் பதவி வகித்து கடந்த இரு தசாப்தங்களாக சைவத் தமிழ் பணியாற்றி வருகின்ற காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த சிவநெறிச் செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் பவள விழா (75வது அகவை நிறைவு) அண்மையில் மிசிசாகா நகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
கனடா இந்து சமயப் பேரவை தலைவர் கவிஞர் வி.கந்தவனம் தலைமையில் நடைபெற்ற இப்பவள விழாவில் கனடாவின் முக்கிய பிரமுகர்களும் கல்விமான்களும் சமய அமைப்புக்களும் கலந்துகொண்டு விழா நாயகரை வாழத்;த்pயிருந்ததுடன் அவரது அளப்பரிய பணிகளை விதந்து பாராட்டியிருந்தனர்.
காரை இந்து பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.சி.தம்பிராசா அவர்களும் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும் முறையே திரு.விசுவலிங்கம் அவர்களிற்கும் திருமதி வடிவழகாம்பாள் விசுவலிங்கம் அவர்களிற்கும் பொன்னாடை போர்த்து கௌரவித்ததுடன் சங்கத்தின் போசகர் திரு.மு.வேலாயுதபிள்ளை பாராட்டு விருதினை வாசித்து வழங்கியிருந்தார்.
திரு தி.விசுவலிங்கம் அவர்கள் காரை இந்துவின் சிறப்புமிக்க பழைய மாணவர் வரிசையில் இடம்பெறக்கூடியவர் என்பதுடன் இலங்கையிலும் நைஐPரியாவிலும் இருபது ஆண்டுகளிற்கு மேலாக கல்விப் பணியாற்றிய உன்னதமான கல்விமானாக விளங்குகின்றார்.க.பொ.த.(உயர்தரம்) தர மாணவர்களிற்கு இவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட பாடநூல்கள் பரீட்சையில் சித்திபெற துணையாகவிருந்து மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் பெருவரவேற்பை பெற்றிருந்தன. கனடா-காரை கலாச்சார மன்றம் என பெயர் மாற்றம் பெற்றுள்ள ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சங்கம் என்கின்ற அமைப்பை 1987ஆம் ஆண்டு நிறுவியவர்களுள் திரு.விசுவலிங்கம் முதன்மையானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கனடாவாழ் காரைநகர் மக்களினதும் கனடா வாழ் தமிழ் மக்களினதும் நன்மதிப்புக்குரியவராக விளங்கும் சிவநெறிச்செல்வர் திரு.விசுவலிங்கம் அவர்களின் சமூகத்திற்கான சேவையினால் காரை இந்து அன்னையும் அதன் புதல்வர்களும் பெருமிதமடைகின்றனர்.
No Responses to “பவள விழாக் கண்ட சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் பழைய மாணவர் சங்கத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்”