விளானை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்; கொண்டிருந்து லண்டனில் வசித்து வந்த பின்னர் தற்போது காரைநகரில் வசித்து வந்தவரும் சமூக உணர்வாளரும், முன்னாள் காரை.அபிவிருத்திச் சபையின் தலைவரும், களபூமி கலையகத்தின் நிறுவுனரும், எமது சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களின் அன்புச் சகோதரனும், எமது சங்கத்தின் நிறுவுனர்களுள் ஒருவரும் ஆரம்ப காலத் தலைவரும் காரை.இந்துவின் முன்னாள் உப-அதிபருமாகிய அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் அன்பு மைத்துனருமாகிய திரு.திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்கள் இன்று 07-05-2022 சனிக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் சங்கத்தின் நலன் விரும்பியான கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன், எமது சங்கத்தின் உறுப்பினரான திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திருமதி பிரபா ரவிச்சந்திரன் அவர்களின் சிறிய தந்தையார் என்பதுடன் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியர் அமரர் எஸ்.கந்தையா அவர்களின் மூத்த சகோதரனின் மகன் வழிப் பேரனும, காரை.இந்துவின் மற்றொரு முன்னாள் ஆசிரியர் அமரர் சண்முகம் அம்பலவாணர்; (சட்டம்பி அம்பலம்) அவர்களின் மகள்வழிப் பேரனும் ஆவார்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”