தமிழ், சமயம், சமூகம், அரசியல் ஆகியன சார்ந்து மக்களிற்கான சேவையில் இறுதி மூச்சுவரை அயராது உழைத்து தடங்கள் பல பதித்த சாதனையாளனும், காரை.இந்து அன்னைக்கு பெரும் புகழ் சேர்த்த கல்லூரி அன்னையின் மகிமை பொருந்திய மூத்த புதல்வனும், பழைய மாணவர் சங்க கனடாக் ;கிளையின் தொடர்பு மிக்க ஆயுட்கால உறுப்பினராக இருந்து (Associate Member) சங்கத்தின் பணிகளில் மிகுந்த கருசனையுடன் செயலாற்றி வந்தவருமாகிய திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் எமது சங்கத்தின் முன்னாள் பொருளாளரான திரு.நடராசா பிரகலாதீஸ்வரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரராவார்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”