எமது சங்கத்தின் மொன்றியல் பிரதேசத்தின் இணைப்பாளரான திருமதி செல்வதி சிறிகணேசர், உறுப்பினரான திருமதி றஞ்சிதசோதி ஜெகசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் உறுப்பினரான திரு.சங்கரப்பிள்ளை ஜெகசோதி அவர்களின் அன்பு மைத்துனரும் உறுப்பினர்களான திருமதி நிர்மலாதேவி திருஞானசம்பந்தன், திருமதி இந்திராதேவி பரம்சோதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வுநிலை உப அதிபரும், மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், காரை.இந்துவின் பழைய மாணவனுமாகிய திரு.பொன்னுத்துரை சிறிகரன் அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்ப உறுப்பினர்களிற்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற மரண அறிவித்தலை கீழே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்.
https://ripbook.com/sriharan-ponnuthurai-62201564b9ec7/notice/obituary-622015d9163af
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”