பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் ஒன்றுகூடலும் நிகழ்வான “காரைச் சங்கமம் 2015‘ க்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வி;த்தியாலயத்தின் (காரை இந்துக் கல்லூரி) ஓய்வுபெற்ற விஞ்ஞானம், பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு அ .சோமாஸ்கந்தன் அவர்களின் 75வது பிறந்த தினத்தை கடந்த 23.07.2015 வியாழன் அன்று மாலை இலண்டன் வாழ் பழைய மாணவர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் சிறப்பாக கொண்டாடி அவரை கௌரவித்திருந்தனர்.
மேற்படி பிறந்தநாள் விழாவினை ஆசிரியர் அறிந்திராத வகையில் அவருக்கு ஆச்சரியமளிக்கும் எதிர்பாராத நிகழ்வாக லண்டன் வாழ் காரை இந்துவின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவல் காரை இந்துவின் முன்னாள் கணித ஆசிரியை திருமதி.பாலாம்பிகை இராசநாயகம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே காணலாம
No Responses to “காரை இந்துவின் முன்னாள் ஆசிரியர் திரு.அ.சோமஸ்கந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பழைய மாணவர்கள்”