மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் பல விருதுகளைப் பெற்றவரும், இலங்கை அரசாங்கத்தின் உயரிய விருதாகக் கருதப்படும் சாகித்திய மண்டல விருதினைப் பெற்ற பெருமைக்குரியவரும், ஈழத்துக் கவிதைப் பரப்பில் முன்னணிக் கவிஞராக தம்மை அடையாளப்படுத்தி வருபவரும், யாழ் மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளருமாகிய “காரையூர் கவிஞர்” வடிவேலு வடிவழைகையன் அவர்களால் எழுதப்பட்ட ‘ஒரு துண்டு வானம்’, ‘குறும்பா கொஞ்சம் குறும்பா’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டு விழாவிற்கு தமிழ்ச் சங்கத்தின் தலைவரான ‘செந்தமிழ்ச் சொல்லருவி’ ச.லலீசன் அவர்கள் தலைமை வகிக்கவுள்ளார்கள்.
காரை.இந்துவின் மைந்தனான கவிஞர் வடிவழகையனை கௌரவித்து ஊக்குவிக்கும் வகையில் ‘குறும்பா கொஞ்சம் குறும்பா’ எனும் கவிதை நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை முன்வந்துள்ளது. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் காரை.இந்துவின் அதிபரும், தாய்ச் சங்கத்தின் தலைவருமாகிய திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்கள் முதற் பிரதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளார்கள்.
இந்நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்கவும் கவிஞர் வடிவழகையனின் எழுத்துப் பணி மேன்மையுற்று விளங்கவும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நிரலுடன் கூடிய அழைப்பிதழை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை.இந்துவின் மைந்தன் “காரையூர் கவிஞர்” வடிவழைகையன் அவர்களின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகிறது.”