கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) பௌதீகவியல், விஞ்ஞானம் ஆகிய பாட ஆசிரியராகவும், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவும் 18 ஆண்டுகள்(1965-1983) கடமையாற்றிய திரு.A.சோமாஸ்கந்தன் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை(11.04.2015) பிற்பகல் 2:00 மணியளவில் லண்டன் Harrow விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் காரை இந்துவின் மற்றொரு விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.S.K.சதாசிவம் அவர்கள் ஆசிரியர் திரு.A.சோமாஸ்கந்தன் அவர்களை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து வழியனுப்பி வைத்திருந்தார்.
கொழும்பு, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல் நிகழ்வான காரை சங்கமம்-2015 இல் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்காகவே திரு.A.சோமாஸ்கந்தன் லண்டன் சென்றடைந்துள்ளார். ஆசிரியர் திரு.A.சோமஸ்கந்தனை லண்டன் விமானநிலையத்தில் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்து வரவேற்றனா.
லண்டன் ஹரோ விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
இதேவேளையில் விளையாட்டுத்துறையில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்து பல வரலாற்று சாதனை மாணவர்களை காரை இந்து விளையாட்டு மைதானத்தில் உருவாக்கிய ஆசிரியர் திரு.A.சோமாஸ்கந்தன் அவர்களை காரை சங்கமத்தில் பிருத்தானியா விளையாட்டு மைதானத்தில் மீண்டும் சந்திக்க கல்லூரியில் சாதனை படைத்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேற்படி முன்னாள் விளையாட்டு வீரர்களை பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கமும் விருந்தினர்களாக அழைத்து மதிப்பளிக்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அந்தவகையில் சிறப்பு விருந்தினராக நியூயோர்க் அமெரிக்காவில் இருந்து காரை இந்துவின் முன்னாள் விளையாட்டு வீரரும், இதய மருததுவ நிபுணருமான மருத்துவ கலாநிதி. ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக பிரான்சிலிருந்து கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.அ.செல்வச்சந்திரனர்(நேரு மாஸ்ரர்) அவர்களும், ரொரன்ரோ, கனடாவிலிருந்து காரை இந்து பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களும், மொன்றியல், கனடாவிலிருந்து காரை இந்துவின் முன்னாள் விளையாட்டு வீரர் திரு.கார்த்திகேசு சிவசோதிநாதன் அவர்களும், ஜேர்மனியிலிருந்து காரை இந்துவின் முன்னாள் விளையாட்டு வீரர் திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இதேவேளையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் தலைவரும் காரை இந்துவின் முன்னாள் விளையாட்டு வீரருமான திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்களும் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இடம்:- Kinsbury High School மைதானம், Stag Lane , Kingsbury , London , NW9 9AA ,
காலம்:– 12/07/2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை
காரை சங்மம்-2015 நிகழ்வுகளை lankasritv.net, karainagar.com, karainagar.co ஆகிய இணையத்தளங்களில் லண்டன் நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நேரடி ஒளிபரப்பாகக் காணலாம்.
No Responses to “காரை இந்துவின் முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.A.சோமாஸ்கந்தன் பிருத்தானியா சென்றடைந்தார்.”