தலைவர்/செயலாளர்
பிரித்தானியா-காரை நலன் புரிச் சங்கம்
அன்புடையீர்!
காரை சங்கமம் சிறப்புற்று விளங்க வாழ்த்துகின்றோம்
காரைநகர் மக்களினதும் பிரித்தானியா வாழ் காரை மக்களினதும் நலன்களுக்காக தங்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பாராட்டப்படக்கூடியனவும் வரலாற்றுப் பதிவானவையாக அமைந்து விளங்கக்கூடியனவுமான பணிகளின் வரிசையில் வருடாந்த நிகழ்வான காரை சங்கமம் அமையப்பெற்றுள்ளது. பிரித்தானியா வாழ் காரை மக்களை ஒன்றுகூடவைத்து அவர்கள் அனைவரும் குலாவி உண்டு விளையாடி குதூகலித்து மகிழவைப்பதுடன் சமூக உறவினை மே;ம்படுத்தும்வகையில் காரை சங்கமத்தினை அமைத்து வருவதுடன் இதன் வெற்றிக்காக உழைத்துவருகின்ற நிர்வாகத்தினையும் உறுப்பினர்களையும் எமது சங்கம் மனதாரப் பாராட்டுகின்றது.
அர்ப்பணிப்பும் சேவையுணர்வும் மிக்க ஆசிரியப்பெருந்தகைகளையும் அதிபர்களையம் கொண்டு விளங்கிய வகையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) தனித்துவம்பெற்று விளங்குகின்றது. அந்த வரிசையில் மாணவர்கள் மனம்கவர்ந்த் சிறந்த விஞ்ஞான ஆசிரியராக மட்டுமல்லாது விளையாட்டுத்துறை ஆசிரியராகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி பாடசாலையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு காத்திரமான பங்காற்றிய முன்னாள் ஆசிரியர் திரு.ஏ.சோமாஸ்கந்தன் அவர்களை 12-07-2015 ஞாயிற்றக்கிழமை நடைபெறவுள்ள காரை சங்கமம் ;நிகழ்வின் பிரதம விருந்தினராக அழைத்து மதிப்பளிக்க முன்வந்த தங்கள் சங்க நிர்வாகத்தினை பாராட்டி நன்றி கூறுகின்றோம். காரை சங்கமம் என்றும்போல அனைத்துவகையிலும் சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது
மு.வேலாயுதபிள்ளை கனக சிவகுமாரன் மா.கனகசபாபதி
தலைவர் செயலாளர் பொருளாளர்
No Responses to “காரை சங்கமம் சிறப்புற்று விளங்க வாழ்த்துகின்றோம்”