நடுத்தெரு, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவரும், எமது கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் அமரர் P.நாகலிங்கம் (1948-1970) அவர்களின் அன்பு மகளும், எமது கல்லூரியின் இசை ஆசிரியை திருமதி கலாசக்தி றொபேசன் அவர்களின் அன்பு பெரியம்மாவும், கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக விளங்கியவருமாகிய திருமதி சிவமணி இராசலிங்கம் அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தின் சார்பில் உதயன் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்த மரண அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
1959ஆம் ஆண்டு கல்லூரியின் மிகச் சிறந்த வீராங்கனையாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த சிவமணி அவர்கள் முன்னாள் அதிபர் அமரர் தியாகராசாவிற்கு வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”