காரைநகர் இந்துக் கல்லூரியினால் 1949ஆம் ஆண்டு முதலாக நிறுவுனர் சயம்புவின் பெயரில் அவ்வப்போது சஞ்சிகைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்விதம் வெளிவந்து எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள சஞ்சிகைகளில் 1950ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பிதழாக வெளியிடப்பட்ட சஞ்சிகையின் PDF வடிவம் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களினால் எழுதப்பட்ட சிறு கண்ணோட்டத்துடன் எடுத்து வரப்பட்டுள்ளது. ஏனைய சஞ்சிகைகளும் தொடர்ச்சியாக எடுத்து வரப்படவுள்ளன.
1950ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வைரவிழா மலர்
ஒரு கண்ணோட்டம்
-எஸ். கே. சதாசிவம்-
1950 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காரைநகர் இந்துக்கல்லூரியின் வைர விழா மலர் ‘சயம்பு’ கல்லூரியின் இலட்சனை உடையதாகிய முன்பக்க அட்டையுடன் வெளியிடப்பட்டுள்ளது.
சயம்பு மலரில் ஆங்கிலம் முக்கியத்;துவம் பெறுகின்றது. அன்றைய காலகட்டத்தில் எட்டாம் வகுப்பிற்கு மேலான கல்வி ஆங்கில மொழியில் நடைபெற்றது. ஸ்ரீமான் முத்து சயம்பு கல்லூரிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவையை கௌரவிக்கும் முகமாக கல்லூரியின் சஞ்சிகைக்கு சயம்பு என பெயரிடப்பட வேண்டும் எனும் கருத்தை ஆசிரிய தலையங்கம் வலியுறுத்துகின்றது.
கல்லூரி அதிபரின் அறிக்கை 50 ஆண்டு கால கல்வி வளர்ச்சி பற்றியும் எதிர்கால கல்வி அபிவிருத்திக்கான முன்மொழிவுகளையும் குறிப்பிடுகின்றது.
மாணவர்களின் ஆங்கிலக் கட்டுரைகளில் திரு. ஐயம்பிள்ளை – P. முத்தையா கோவளம் வெளிச்ச வீட்டுப் பகுதியில் ஒரு மாலைப் பொழுது – மு. திருநீலகண்டசிவம் தமிழில் – நமது கிராமம் – P. முத்தையா வைரவிழா கொண்டாட்டம் – T. சிவசம்பு ஆகிய கட்டுரைகள் நமது கிராமத்தின் பழைய காட்சிகளை மீட்டுப் பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது.
திரு. M. சபாரத்தினம் அவர்களின் வைரவிழா வாழ்த்துப்பா, திருமதி. தங்கம்மா நடராசா அவர்களின் சேவை நலன் வாழ்த்துப்பா என்பன இடம்பெற்றுள்ளது.
கல்லூரி ஸ்தாபகர், கல்லூரி அதிபர், முன்னை நாள் அதிபர்கள், நீதிபதி திரு. ந. நடராசா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது. வைரவிழா காரைநகர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கொழும்பு நிர்வாகக் குழு உறுப்பினர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது. காரைநகர் நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினர்களான சேவியர் M. வேலுப்பிள்ளை, கணக்காளர் V. கந்தப்பு, கணக்காளர் V. ஆறுமுகம் ஆகியோரினதும் கொழும்பு கிளையின் முக்கிய உறுப்பினர்களான திரு. K. சண்முகம், திரு. N. பொன்னம்பலம், திரு. V. சோமசுந்தரம், திரு. S. நடராசா ஆகியோரினதும் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரிய குழாமின் படம், திரு. R. கந்தையா, திரு. V. சுப்பிரமணியம் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் மண்டபம் கட்டிய வைத்தியர் K. விசுவநாதன், கல்லூரியின் அலுவலகத்திற்கு கட்டிடம் வழங்கிய திரு. A. சண்முகம், நடராசா மண்டப கட்டிடத்தை மேற்பார்வை செய்த திரு. V.தம்பிப்பிள்ளை ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளது.
உடற்கல்வி ஆசிரியரின் அறிக்கை கல்லூரியில் உடற்கல்வி வகித்த உன்னத பாகத்தைக் காட்டுகின்றது. உதைபந்தாட்ட குழுவினரின் படத்தில் திருவாளர்கள் A. A. மார்கண்டு, A. செல்வரத்தினம், R. பாலசுப்பிரமணியம், A. சண்முகநாதன், சந்திரசேகரம், அருளானந்தம், சேனாதிராசா, திருநீலகண்டசிவம் ஆகியோரை அடையாளப்படுத்தக் கூடியதாக உள்ளது. பாடசாலை குத்துச் சண்டைக் குழுவினர் வடமாகாண ரீதியில் முன்னிலை வகித்தனர். வீரர்களின் படம் இடம்பெற்றுள்ளது. திருவாளர்கள் K. மகாதேவன், சேனாதிராசா, பரமநாதி, பத்மநாதன், குணசிங்கம், சண்முகநாதன் ஆகியோர் போட்டிகளில் பரிசில்கள் பெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் முன்னிலை வகித்த காரைநகர் மக்களின் வர்த்தக ஸ்தாபனங்களின் விளம்பரங்களும், ஏனையோரின் விளம்பரங்களும் காணப்படுகின்றன. அவற்றில் 99 வீதமானவை இன்றில்லை. கல்லூரியின் சஞ்சிகை கல்லூரி சமூகத்தின் புலமைக்கு சான்றாக அமைந்துள்ளது.
கீழே உள்ள இணைப்பினை அழுத்தி சஞ்சிகையினை பார்வையிடலாம்:
http://www.karaihinducanada.com/wp-content/uploads/2021/11/1950-om-5.pdf
No Responses to “காரை.இந்துவின் வெள்ளி விழா சிறப்பிதழாக வெளிவந்த ‘சயம்பு’ சஞ்சிகை சிறு கண்ணோட்டத்துடன் PDF வடிவில்”