.காரை.இந்துவில் சேவையாற்றி ஓய்வுபெற்ற உப அதிபரான திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களின் சேவையைப் பாராட்டி பாராட்டு விருதும், ரொக்கமாக அன்பளிப்பும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் வழங்கப்பட்டிருந்தது. கல்லூரியில் நடைபெற்றிருந்த சேவைநலன் பாராட்டு விழாவில் வைத்து இவை வழங்கப்பட்டிருந்தன. பாராட்டு விருதினை கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின் உதவிச் செயலாளரும், பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளருமாகிய திருமதி நிரஞ்சனா செந்தூரன் அவர்களும் அன்பளிப்பினை ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் வழங்கிக் கௌரவித்தனர். திரு.லிங்கேஸ்வரன் அவர்கள் காரை.இந்து அன்னையின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்தாகும்.
அன்பளிப்பையும் பாராட்டு விருதையும் வழங்கிவைத்து உரையாற்றிய பண்டிதர் வேலாயுதபிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றி வருகின்ற மகத்தான பணிகளைப் பாராட்டியதுடன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி ஊக்கிவித்து வருகின்ற அவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் விதந்து போற்றுதற்குரியன எனக் குறிப்பிடார்.
விருதும் அன்பளிப்பும் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “ஓய்வுபெற்ற கல்லூரியின் உப அதிபர் தெ.லிங்கேஸ்வரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினால் பாராட்டு விருதும், அன்பளிப்பும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.”