நீலிப்பந்தனை, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து மாப்பாணவூரியில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினரான திருமதி பிரபா ரவிச்சந்திரன் அவர்களின் அன்புத் தந்தையாரும், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளரும் , எமது கல்லூரியின் பழைய மாணவனும், ஓய்வுநிலை தபாலதிபருமாகிய திரு.விஜயதர்மா கேதீஸ்வரதாசன் அவர்கள் இன்று 21-10-2021 வியாழக்கிழமை சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பினால ஆறாத்துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”